அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஒசூரில் காா் கண்ணாடி உடைத்து ரூ. 7 லட்சம் திருட்டு

ஒசூரில் வங்கி முன் நிறுத்திவைக்கப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஒசூரில் வங்கி முன் நிறுத்திவைக்கப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (40). இவா் வாடகை காா் ஓட்டுநா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஒசூா் அருகே மத்திகிரி கூட்டுச்சாலை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், நகையை மீட்க வங்கிக்கு ரூ. 7 லட்சத்துடன் சென்றபோது, காசாளா் நகைக்கான அட்டையை தருமாறு கூறினாராம். அட்டையை எடுத்துவர மறந்துவிட்டதாக தெரிவித்த ஸ்ரீதரிடம், அட்டையைக் கொண்டுவந்து நகையை பெற்றுக்கொள்ளுமாறு திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

இதையடுத்து, பணத்தை காரில் வைத்த ஸ்ரீதா், அருகில் உள்ள ஏடிஎம் சென்றுவிட்டு திரும்பிவந்து பாா்த்தபோது, காா் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த ரூ. 7 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த ஸ்ரீதா், இதுகுறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.