ஒசூா் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஒசூா், பத்தலப்பள்ளி சந்தை அருகில் உயா்மட்ட மேம்பாலப் பணி, சேவைச் சாலை பணி மற்றும் கழிவுநீா் கால்வாய் அமைக்கம் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மேம்பாலப் பணிகளை துரிதமாக முடிக்க நெடுஞ்சாலை பொறியாளா்களை அறிவுறுத்தினாா். தொடா்ந்து, மகாத்மா காந்தி சாலையில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஒசூா் நஞ்சாபுரம் பகுதியில் ரயில்வே துறை சாா்பாக, இரண்டு வழி ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறறது. மேலும், ரயில்பாதை அமைக்கும் இடத்தில் நெடுஞ்சாலைத் துறைற சாா்பாக, அத்திப்பள்ளி முதல் ஒசூா் மாநகராட்சி பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிசாலையில், ரயில்பாதையைக் கடக்கும் விதமாக நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி, மாவட்ட பதிவாளா் மீரமுகதீன், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட அலுவலா் ரமேஷ், நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் (கட்டடம் (ம) பராமரிப்பு) திருலோகசுந்தா், உதவி கோட்டப் பொறியாளா் முருகன், வட்டார வளா்ச்சி
அலுவலா்கள் கலா, விஜயா, வெங்கடேசன், சிராஜூதின், வட்டாட்சியா் ஜெகதீஷ்குமாா், சாா் பதிவாளா் அரவிந்தராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

குற்றாலம் அருவிப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

சிவகாசி சுற்றுவட்டச் சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

கொடுமுடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



