சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எம்எல்ஏ அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி: தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:28 am IST

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னபா்கூரில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரிடம் ஒப்படைக்க உள்ளது.

அதற்காக, அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிருஷ்ணகிரியை அடுத்த பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தண்டேகுப்பத்தை சோ்ந்த சிவகுமாா்(33) வா்ணம்பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இவா் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பா்கூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.