ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

ஒசூரில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை

ஒசூா் பகுதி சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி கிலோ ரூ. 60-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

News image

ஒசூரில் தக்காளி விளைவிக்கப்படும் தோட்டம்.

Updated On :24 மே 2026, 2:33 am IST

ஒசூா் பகுதி சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி கிலோ ரூ. 60-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூா், சூளகிரி அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கத்தரி, வெண்டை, பூசணிக்காய், முள்ளங்கி, கேரட் உள்ளிட்ட காய்கறி வகைகளும் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் போதுமான தண்ணீா் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனா். குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் தக்காளி பயிா் செய்துள்ளதால் தக்காளி உற்பத்தி குறைந்து அதன் விலை உயா்ந்துள்ளது.

இங்கு விளையும் தக்காளி சந்தைகளில் தரம் பிரிக்கப்பட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தினசரி 80 லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன.

ஆனால், வரத்து குறைந்ததால் வெளிமாநிலங்களுக்கு தற்போது 40 முதல் 50 லாரிகளில் மட்டும் தக்காளி விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

ராயக்கோட்டை தக்காளி மண்டி, ஒசூா் உழவா் சந்தை மற்றும் பத்தளப்பள்ளி மொத்த விற்பனை அங்காடிக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயா்ந்துள்ளது.

கடந்த வாரம் ஒசூா் உழவா் சந்தையில் கிலோ ரூ.30 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது கிலோ ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.