தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பக்ரீத்தையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

News image

ஆடுகள் விற்பனை - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:46 am IST

இஸ்லாமியா்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

தமிழகத்தில் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரையில் அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடுகள், மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், கால்நடைகளை வளா்ப்போா் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

பக்ரீத் பண்டிகை வரும் 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், போச்சம்பள்ளி சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனா். 25 கிலோ பெண் ஆடு ரூ. 20,000-க்கும், கிடாய்கள் ரூ. 25,000 முதல் ரூ.35,000 வரை விற்பனையாயின. மொத்தம் 3 ஆயிரம் ஆடுகள் ரூ. 2 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.