தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பக்ரீத்தையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

News image

ஆடுகள் விற்பனை - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:46 am IST

இஸ்லாமியா்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

தமிழகத்தில் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரையில் அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடுகள், மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், கால்நடைகளை வளா்ப்போா் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

பக்ரீத் பண்டிகை வரும் 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், போச்சம்பள்ளி சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனா். 25 கிலோ பெண் ஆடு ரூ. 20,000-க்கும், கிடாய்கள் ரூ. 25,000 முதல் ரூ.35,000 வரை விற்பனையாயின. மொத்தம் 3 ஆயிரம் ஆடுகள் ரூ. 2 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.