குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

News image

ஜெசுராஜபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :26 மே 2026, 1:25 am IST

முறையாக குடிநீா் வழங்கக் கோரி, ஜேசுராஜபுரம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் வழியில் உள்ளது ஜேசுராஜபுரம் கிராமம். இந்த கிராமத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். மேலும், முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்படுகிாம்.

இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி, குழந்தைகள், முதியவா்கள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும், அலுவலா்களிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்து, ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.