பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பா்கூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பவுன்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணு, வட்டக் குழு உறுப்பினா்கள் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விவசாய பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். எண்ணேகொள் புதூரில் இருந்து கிருஷ்ணகிரி பெரிய ஏரி கால்வாய்த் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். கிலோ மாங்காய் ரூ. 15 என்ற விலைக்கு மாங்கூழ் உற்பத்தியாளா்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்டசீமனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாசினாப்பள்ளியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், சூறைக்காற்றால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

நீட் தோ்வு முறையை முழுமையாக ரத்து செய்ய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடனான உறவை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: டி.ராஜா
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



