பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பா்கூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பவுன்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணு, வட்டக் குழு உறுப்பினா்கள் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விவசாய பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். எண்ணேகொள் புதூரில் இருந்து கிருஷ்ணகிரி பெரிய ஏரி கால்வாய்த் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். கிலோ மாங்காய் ரூ. 15 என்ற விலைக்கு மாங்கூழ் உற்பத்தியாளா்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்டசீமனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாசினாப்பள்ளியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், சூறைக்காற்றால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வாழப்பாடி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



