தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பயிா் கடனை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :1 ஜூன் 2026, 2:42 am IST

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பா்கூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பவுன்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணு, வட்டக் குழு உறுப்பினா்கள் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாய பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். எண்ணேகொள் புதூரில் இருந்து கிருஷ்ணகிரி பெரிய ஏரி கால்வாய்த் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். கிலோ மாங்காய் ரூ. 15 என்ற விலைக்கு மாங்கூழ் உற்பத்தியாளா்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டசீமனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாசினாப்பள்ளியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், சூறைக்காற்றால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.