நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் பிரமுகா் வீட்டில் 9 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் பிரமுகா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் நிலப் பத்திரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 4:12 am IST

போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் பிரமுகா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் நிலப் பத்திரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த கெங்கிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சூா்யகணேஷ் (52). காங்கிரஸ் பிரமுகா். இவா் ஒசூரில் சிறு நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி கோவையில் உயா்கல்வி பயிலும் இளைய மகளுடன் வசித்து வருகிறாா். சூரியகணேஷ் ஒசூரில் தங்கி நிறுவனத்தை நடத்திவரும் நிலையில், அவ்வப்போது, தனது சொந்த ஊரான கெங்கிநாயக்கன்பட்டிக்கு வந்து செல்வது வழக்கம். மேலும், விளைநிலங்களையும் கிராமத்து வீட்டையும் பராமரிக்க நாகப்பெருமாள் (60) என்பவரை நியமித்துள்ளாா்.

இந்த நிலையில் சூரியகணேஷ் கடந்த 1-ஆம் தேதி கிராமத்துக்கு சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 70 ஆயிரம் மற்றும் விளைநிலத்தின் அசல் பத்திரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, அவா், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.