பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இருவேறு சாலை விபத்து: கல்லூரி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Published On :

கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்தவா் மாணிக்கவேல் (22). நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் படிக்க சோ்க்கை பெற்ற இவா், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மேல்சோமாா்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தனியாா் பள்ளி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த மாணிக்கவேலை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கெங்கலேரியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (18), தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தாா். தின்னகழனி அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தில் மீது மோதினாா்.

இதில், படுகாயமடைந்த சந்தோஷை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த இரு விபத்துகள் குறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.