புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இடிந்து விழும் நிலையில் சத்துணவுக் கூடம்

பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய சத்துணவுக் கூடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:04 am

DIN

பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய சத்துணவுக் கூடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு செல்லப்பம்பளையத்தில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்விப் பயின்று வருகின்றனர். இப் பள்ளியின் பழைய சத்துணவுக் கூடம் பழுதடைந்துள்ளதால் புதிதாக அதன் அருகே சத்துணவுக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பழைய சத்துணவுக்  கூடம் பயன்படுத்தாத நிலையில், பழைய புத்தகம், செங்கல் மற்றும் பழைய பொருள்கள் அடுக்கி வைத்துள்ளனர். மேலும், பழைய கட்டடத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுந்து வருவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும் விபத்துகள் ஏற்படும் முன் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.