வாரியத் தேர்வு: பாவை பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பிடம்
தொழில்ட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அக்டோபரில் நடைபெற்ற வாரியத்தேர்வில் பாவை பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.


தொழில்ட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அக்டோபரில் நடைபெற்ற வாரியத்தேர்வில் பாவை பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
கல்லூரியின் எலட்க்ரானிக்ஸ்- எலக்ட்ரிக்கல் துறை மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும், ஆட்டோமொபைல்- கணினி துறை மாணவர்கள் 95 சதவீத தேர்ச்சியும், சிவில், மெக்கானிக்கல் துறை மாணவர்கள் 90 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
33 பேர் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், நூற்றுக்கும் மேற்பட்டோர் 95 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
எலட்க்ரானிக்ஸ் துறை மாணவி வி. சாலினி 700-க்கு 692 மதிப்பெண்களும், மாணவன் ஏ. இசக்கிமுத்து 690 மதிப்பெண்களும், மாணவி எம்.சுபாஷினி 700க்கு 684 மதிப்பெண்களும், மாணவி சி. பூமா 700க்கு 682 மதிப்பெண்களும், மாணவி வி. அருள்மொழி, மாணவர் கே.வி. கவின் 680 மதிப்பெண்களும், எலக்ட்ரிக்கல் துறை மாணவன் எஸ். வினோத்குமார் 686 மதிப்பெண்களும், இயந்திரவியல் துறை மாணவன் டி. சோஜன் தாமஸ் 681 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
முதலாம் ஆண்டில் மாணவி பி.ஆர்.அமிர்தலஷ்மி 800-க்கு 775 மதிப்பெண்களும், மாணவர் ஆர். விஷ்ணு 769 மதிப்பெண்களும், மாணவி எஸ். செளமியா 767 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
இவர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், கல்லூரி முதல்வர் எஸ்.சுமதி உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...