கொல்லிமலை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், பைல்நாடு ஊராட்சி, தண்ணிமாத்தி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை இப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படவில்லை.
இப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் அரசின் கவனத்துக்கு இந்த கோரிக்கையை எடுத்துச் சென்றார்.
இதையடுத்து, இந்த பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தில் உணவு வழங்க அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து, இத் திட்டத்தை எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் புதன்கிழமை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறை கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது, தண்ணிமாத்தி கிராமத்தில் சமுதாய நலக் கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜாத்தி, உதவி ஆசிரியர் தமிழ்த்தென்றல், ஊராட்சி கழகச் செயலர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஓய்வு பெற்ற நீதிபதி நேரில் ஆய்வு

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மனைவி மனு

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


