மோகனூரில் சாலை விதிகளை மீறிய 2 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகஆனந்த், கலைச்செல்வி ஆகியோர் மோகனூர்-வாங்கல் காவிரி மேம்பாலம் அருகே சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோகனூரில் இருந்து வாங்கல் வழியாக கரூர், கரூரில் இருந்து வாங்கல் வழியாக மோகனூர் பகுதிக்கு வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
100-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சோதனை செய்ததில், தகுதிச் சான்று புதுப்பிக்காமலும், சாலை போக்குவரத்து வரி செலுத்தாமலும் இயக்கிய இரண்டு பயணிகள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி இல்லாதது என 25 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிமுகவில் மீண்டும் பொறுப்பு! துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!

ரஜினியின் தர்மன் படப்பிடிப்பு தொடக்கம்..! புதிய போஸ்டர்!
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய விஜய்! பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் திடீர் மாற்றம்!!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


