வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பொதுக்கிணறு அருகே கோயில் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரிக்கை

பொதுக்கிணறு அருகே கோயில் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :14 மே 2018, 9:13 pm

பொதுக்கிணறு அருகே கோயில் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் பழ.மணிமாறன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல்-சேலம் சாலை முருகன் கோயில் பின்புறம் என்ஜிஜிஓ காலனி உள்ளது. இங்கு 1978ஆம் ஆண்டு பல்வேறு அரசுப் பணிகளில் இருந்தவர்கள் வீடு கட்டுவதற்காக இடம் வாங்கி 129 மனைகளாகப் பிரித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
பொதுப் பயன்பாட்டுக்காக பூங்கா, பொதுக் கிணறு, அலுவலகம், பள்ளி ஆகியவற்றுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மனை எண் 26 இல் குடிநீர்த் தேவைக்கான பொதுக் கிணறு வெட்டி அதில் உள்ள நீரை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தோம். பின்னர், ஊராட்சி நிர்வாகம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கி குடிநீர் வழங்கியதால், அக் கிணறு பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், பொதுக் கிணறு உள்ள இடத்தில் சிலர் மாதம்தோறும் அமாவாசை, கிருத்திகை, பெளர்ணமி நாட்களில் பூஜை செய்து வருகின்றனர். மேலும் கிணறு அருகே கோயில் கட்டவும் முயற்சி செய்து வருகின்றனர்.
பொதுக் கிணறு உள்ள இடத்தில் தொடர்ந்து பூஜைகள் செய்து வருவதற்கும், கோயில் கட்டவும் முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும். மேலும் அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை நகராட்சி நிர்வாகம் மோட்டார் அமைத்து தண்ணீர் இறைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.