விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமாரபாளையத்தில் குதிரை வண்டி ரேக்ளா எல்லை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் - பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இப் போட்டிகளுக்கு நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.கே. நாகராஜன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் எம். வெங்கிடு வரவேற்றார்.
திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். சண்முகம் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். தமிழகம் முழுவதுமிருந்து 70-க்கும் மேற்பட்ட குதிரைகள் இப் போட்டிகளில் பங்கேற்றன.
புதிய குதிரை, 43 அங்குல உயர குதிரை, 45 அங்குல உயர குதிரை மற்றும் பெரிய குதிரை என நான்கு பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் காவேரி நகர் முதல் 7 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட இப்போட்டிகளை சாலையின் இருபுறங்களிலும் ஏராளானோர் பார்த்து ரசித்தனர். இதில், முதல் மூன்றிடங்களைப் பிடித்த குதிரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


