சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நடத்தியதின் 125-ஆம் ஆண்டை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு ஊர்வலம் திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை வழக்குரைஞர் ராஜசேகர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் கோழிக்கால் நத்தம் சாலையிலிருந்து துவங்கி ரதவீதி வழியாக சி.எச்.பி. காலனியில் அமைந்துள்ள மகாதேவ வித்யாலயம் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
வித்யாவிகாஸ் கல்வி நிறுவன தாளாளர் சிங்காரவேலு தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இராம. ராஜசேகர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பழனி அருகே 960 மதுப் புட்டிகள் பறிமுதல்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

