பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம்

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 8:53 am IST

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், உலகளவில் இளம் தொழில்முனைவோருக்கான சவால்களும், வாய்ப்புகளும் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் சுபத்ரா வரவேற்றார்.  
கருத்தரங்கில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை பேராசிரியர் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உலகளவில் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்தும், அவற்றில் உள்ள சவால்களை இளைய தலைமுறையினர் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார். 
இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் சுபத்ரா, பேராசிரியர்கள் மற்றும் வணிகவியல் மன்றப் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். உதவிப் பேராசிரியர் செல்வராஜு நன்றி கூறினார்.                                        
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.