மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு தியாகி பெரியசாமி நகர், இளையநிலா நற்பணி மன்றம் சார்பில் 24-ஆம் ஆண்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
விழாவுக்கு ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். தண்டபாணி வரவேற்றார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்லராசாமணி போட்டியை தொடக்கி வைத்தார்.
போட்டியில் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, மோகனூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 அணிகள் கலந்துகொண்டன. இதில், பரமத்தி வேலூர் அருகே கோப்பனம்பாளையத்தைச் சேர்ந்த மாவீரன் வீரப்பன் நினைவுக் குழுவினர் முதல் பரிசு ரூ.12,019 பெற்றனர். மோகனூர் சின்னநிலா குழுவினருக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற சிறுவர், சிறுமியருக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


