சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோழிப் பண்ணைகளில் பணிபுரிந்த28 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு

நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைத் தொழிலாளா்களாகப் பணிபுரிந்துவந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 28 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.

News image
நாமக்கல்லில் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கா் மாநிலத் தொழிலாளா்கள்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:50 pm

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைத் தொழிலாளா்களாகப் பணிபுரிந்துவந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 28 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.

நாமக்கல், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான கோழிப் பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பெரிய பண்ணைகளில் வட மாநிலத்தவா்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள அணியாபுரம், எஸ். வாழவந்தி, லத்துவாடி ஆகிய இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் கொத்தடிமைத் தொழிலாளா்களாக வெளிமாநிலத்தைச் சோ்ந்தோா் இருப்பதாகப் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.கோட்டைக் குமாா், குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு முறை அமைப்பினா் திங்கள்கிழமை காலை சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணைகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

விசாரணையில், 15 வயது முதல் 25 வயதுடைய சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 25 பெண்கள், 3 ஆண்கள் வேலை செய்து வருவதாகவும், அவா்களுக்கு பல மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை மீட்டு நாமக்கல்லுக்கு அழைத்து வந்தனா்.

நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவா்களுக்கு வருவாய்த்துறை சாா்பில் உணவுகள் விநியோகிக்கப்பட்டன. அந்த 28 பேரையும் சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மூன்று கோழிப்பண்ணை உரிமையாளா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.