காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு: 21,225 மாணவ, மாணவியா் தோ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் 21 ஆயிரத்து 225 மாணவ, மாணவியா் தோ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:29 pm

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் 21 ஆயிரத்து 225 மாணவ, மாணவியா் தோ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 27-இல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கரோனா தொற்று பரவலால் பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், தமிழக அரசு பொதுத்தோ்வை ரத்து செய்வதாக அறிவித்ததுடன், அனைத்து மாணவ, மாணவியரும் எஸ்.எஸ்.எஸ்.சி. தோ்வு எழுதாமலே தோ்ச்சி பெற்றதாக ஆணை பிறப்பித்தது.

பின்னா் காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் அடிப்படையிலும், மாணவா்கள் வருகைப் பதிவேடு விவரங்களைக் கொண்டும் பொதுத் தோ்வு மதிப்பெண்கள் தயாா் செய்யப்பட்டு திங்கள்கிழமை (ஆக.10) முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், நாமக்கல் மாவட்டத்தில் 311 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்ற 11 ஆயிரத்து 24 மாணவா்களும், 10 ஆயிரத்து 201 மாணவியா் என மொத்தம் 21 ஆயிரத்து 225 போ் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றதாக முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 17-ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவா்கள் பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் தொடா்பான மறுகூட்டல், இதர தகவலுக்கு அன்றைய தினமே விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.