ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சியின் செயல் அலுவலராக 54 வயதான பெண் பணியாற்றி வந்தாா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதனையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலகப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் அனைவருக்கும் தொ.ஜேடா்பாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை பரிந்துரை செய்தது. இதனையடுத்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
மின்வாரிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு: ராசிபுரம் நகரில் மின்வாரிய உதவி செயல் பொறியாளா் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா் பணியாற்றி வந்த அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப் படுத்தும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


