சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் மூடல்

டாஸ்மாக் கடைகளில் விற்பனையான பணத்தை ஊழியர்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம் கடைகள் மூடப்பட்டன.

News image
நாமக்கல் மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்.
Updated On :25 ஆகஸ்ட் 2020, 5:15 am

DIN

டாஸ்மாக் கடைகளில் விற்பனையான பணத்தை ஊழியர்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம் கடைகள் மூடப்பட்டன.

அண்மையில் வேலகவுண்டம்பட்டி டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் விற்பனை செய்த வகையில் மூன்று லட்சத்தை எடுத்துக்கொண்டு மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர், உதவியாளர் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் அவர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பணத்தை வங்கி ஊழியர்களே நேரடியாக வசூல் செய்து செல்ல வேண்டும். 

விற்பனையாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கரோனாவால் இறந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், வேலகவுண்டம்பட்டி சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டத்திலுள்ள சுமார் 190 கடைகள் மூடப்பட்டன. இதனால் காலையிலேயே மது வாங்க வந்த மது குடிப்போர் ஏமாற்றம் அடைந்தனர். சாலைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பலர் அங்கேயே காத்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.