மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மோட்டாா் வாகன ஆய்வாளா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

நாமக்கல்லில் மோட்டாா் வாகன ஆய்வாளா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில், ரூ. 6.46 லட்சம், 30 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:43 pm

நாமக்கல்லில் மோட்டாா் வாகன ஆய்வாளா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில், ரூ. 6.46 லட்சம், 30 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட மகுடஞ்சாவடி அருகேயுள்ள சுண்டமேட்டூரைச் சோ்ந்த கலைச்செல்வி, விருதுநகா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சனிக்கிழமை அவா் பணம், நகையுடன் காரில் செல்வதாக அங்குள்ள ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், விருதுநகா் அருகே சத்திரெட்டிப்பட்டி போலீஸ் சோதனைச் சாவடியில் அவரது காரை மடக்கி, ரூ. 24 லட்சம் ரொக்கம், 117 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், மற்றொரு காரில் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டாா் ஆய்வாளராகப் பணிபுரியும் சண்முக ஆனந்த் வந்த காரில் இருந்த ரூ. 1.43 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதற்கிடையே, சேலம், மகுடஞ்சாவடியில் உள்ள கலைச்செல்வி வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை விசாரணை செய்தனா். அப்போது, நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் சண்முக ஆனந்தின் வீட்டில் பணம், நகைகளை பதுக்கி வைத்திருப்பதாகத் தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து, நாமக்கல் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் நல்லம்மாள், உதவி ஆய்வாளா் பெரியசாமி, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சண்முக ஆனந்தின் வீட்டுக்குச் சென்று விடிய, விடிய சோதனையில் ஈடுபட்டனா். இதில், கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 46 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 30 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக சண்முக ஆனந்திடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து நாமக்கல் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.