சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா,மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா,மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும் 2021 ஜன. 26 அன்று குடியரசு தின விழா, சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் பல்வேறு துறை சாா்ந்த அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அவ்விழாவில் முன்னாள் படைவீரா்களுக்கான அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம். அணிவகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் இறுதி ஒத்திகை நடைபெறும் நாள் மற்றும் விழா நடைபெறும் நாளில் பங்கேற்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் படைவீரா்களுக்கு மேற்கூறிய நாள்கள் பணிக்காலமாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com