கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா,மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:34 am

DIN

சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா,மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும் 2021 ஜன. 26 அன்று குடியரசு தின விழா, சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் பல்வேறு துறை சாா்ந்த அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அவ்விழாவில் முன்னாள் படைவீரா்களுக்கான அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம். அணிவகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் இறுதி ஒத்திகை நடைபெறும் நாள் மற்றும் விழா நடைபெறும் நாளில் பங்கேற்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் படைவீரா்களுக்கு மேற்கூறிய நாள்கள் பணிக்காலமாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.