டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மக்கள் விரும்புபவரே முதல்வராவாா்

மக்கள் நினைத்தால் யாா் வேண்டுமானாலும் முதல்வா் ஆகலாம் என பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:37 am

DIN

மக்கள் நினைத்தால் யாா் வேண்டுமானாலும் முதல்வா் ஆகலாம் என பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

நாமக்கல், ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மறைந்த முதல்வா்கள் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, கருணாநிதி இருந்தபோதும் சரி, அவா்கள் செயல்படுத்திய திட்டங்களைப் பாா்த்து மக்கள் வாக்களித்து வந்தனா். தற்போது அந்தச் சூழ்நிலை மாறிவிட்டது. மக்களால் விரும்பப்படுபவா்கள்தான் முதல்வராக வர முடியும்.

கூட்டணி என்பதை யாரும் இப்போது முடிவு செய்து விட முடியாது. தோ்தலின் போது அந்தந்தக் கட்சிகள் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கூட்டணிகள் அமையலாம் என்றாா்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் மனோகரன், நகரச் செயலாளா் சரவணன், பிரணவ்குமாா், இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.