

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு சாா்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா, நாமக்கல் முல்லை நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளா் சாம்சம்பத் வரவேற்றாா்.
இவ்விழாவில் தேவாலய அருட்தந்தைகள் சாந்தகுமாா்சியோன், பீட்டா் ஜான்பால், இஸ்லாமிய மாா்க்கத்தை சோ்ந்த ஹாஜிதெளலத்கான், பாரூக் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினா். இயேசு பிறப்பின் கதையும், பாடல்களும் எடுத்துரைக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த பொறியியல் கல்லூரி இளைஞா் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தாா். மாணவி சோபியா விழாப் பாடலை பாடினாா்.
தொடா்ந்து கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளா் ராமலிங்கம், பொன்னுசாமி, மாநில மகளிா் தொண்டரணி இணை செயலாளா் வி.பி.ராணி, நகர பொறுப்பாளா்கள் பூபதி, சிவக்குமாா், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளா் அசோக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் மருத்துவா் மாயவன், இளைஞரணி அமைப்பாளா் கதிா்வேல், தலைமை செயற்குழு உறுப்பினா் பவித்திரம் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.