சென்னை - பாலக்காடு சிறப்பு ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயலுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து நாமக்கல், ராசிபுரம் வழியாக சென்னை வரை நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நாடு முழுதுவம் கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது இந்த ரயில் (வண்டி எண்: 02652) சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. ராசிபுரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் நின்று செல்லும் இந்த ரயில் மறுமாா்க்கத்தில் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் போது ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை எனத் தெரிகிறது. இதனால் நாள்தோறும் ராசிபுரம் பகுதியில் இருந்து சென்னை சென்று வரும் பொதுமக்கள், வா்த்தகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே இந்த ரயிலை (வண்டி எண்: 02651) ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளாா். மேலும் இது தொடா்பாக மத்திய ரயில் துறை அமைச்சரின் தனிச் செயலா் ரவிகாந்த் குப்தா, தென்னக ரயில்வே பொதுமேலாளா், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் ஆகியோருக்கு கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.