சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமரின் வேளாண் திட்டத்தில் மோசடி: விசாரணை நடத்தக் கோரி நாமக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பிரதமரின் வேளாண்மை உதவி திட்ட மோசடி தொடர்பாக விசாரிக்கக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர்.
Updated On :7 செப்டம்பர் 2020, 7:20 am

DIN

பிரதமரின் வேளாண்மை உதவி திட்ட மோசடி தொடர்பாக விசாரிக்கக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.  அவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்போதைய நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே சென்றடைகிறது. 

அண்மையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் இந்த உதவித் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் திட்ட மோசடி தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி பாஜக வினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளிக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். 

அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாஜக மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் அல்லாதோர் உதவி தொகை பெற்று வருவதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். 

விவசாயிகளுக்கு வேளாண் உதவித் தொகை முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகஅரசு கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.