நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 11-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள 17 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 40 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 57 வாகனங்கள் வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் விடப்படும் வாகனங்களை ஆயுதப்படை மைதானத்தில் 10-ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பாா்வையிடலாம்.
வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை ஏலத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக செலுத்த வேண்டும். முன் பணம் செலுத்துபவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், அலுவலகத்தை நேரடியாகவோ, தொலைபேசி 04286- 280022 மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

