மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிலம்பொலியார் 92-ஆவது பிறந்த நாள்: பல்வேறு கட்சியினர் மரியாதை

நாமக்கல்லில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனாரின் 92-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
சிலம்பொலியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திசெல்வன்.
Updated On :24 செப்டம்பர் 2020, 6:32 am

DIN

நாமக்கல்லில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனாரின் 92-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தை பூர்வீகமாக கொண்டவர் சிலம்பொலி சு செல்லப்பனார். 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி பிறந்த அவர் சிறுவயது முதலே தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். சிலப்பதிகாரத்தை தன்னுடைய தூய தமிழில் பேசி கிராமப்புறத்தில் உள்ளோரையும் அந்நூலின் மேன்மையைப் பற்றி அறியச் செய்தார். மறைந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், செல்லப்பனாரின் மேடைப்பேச்சை ரசித்து அவரை பாராட்டியதுடன் சிலம்பொலி என்ற பட்டத்தையும் அவருக்கு சூட்டினார். 

கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி தன்னுடைய 90-ஆவது வயதில் காலமானார். அவர் பிறந்த சிவியாம்பாளையம் கிராமத்தில் செல்லப்பனாரின் திருவுருவச் சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை (செப்.24) அவரது 92-ஆவது பிறந்தநாளையொட்டி சிலை அமைக்கும் இடத்தில் பீடம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்கட்சியினர் மட்டுமின்றி சிலம்பொலியாரின் மகன் கொங்குவேள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், கல்வியாளர் ஆர்.பிரணவ் குமார்  மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Story image

மேலும் சிலம்பொலியார் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர், தமிழறிஞர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் நாமக்கல் திமுக அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் சிலம்பொலியார்  திருவுருவப் படத்திற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ. காந்திசெல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.