மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே அதிமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

அதிமுக செயற்குழுக் கூட்டம் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியே நடைபெறுகிறது என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:38 pm

DIN

அதிமுக செயற்குழுக் கூட்டம் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியே நடைபெறுகிறது என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக செயற்குழு கூட்டம் கூடுவது கடந்த நான்கு மாதங்களாக தள்ளிப்போனது. தற்போது தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில்தான் திங்கள்கிழமை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் லட்சியத்தையும், கொள்கையையும் முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறை மூலம், பேரிடா்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழையைப் பாதுகாப்பாக எதிா்கொள்வதற்கும், இயற்கை சீற்றங்களை எதிா்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் எவை எனக் கண்டறியப்பட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீா் தேங்குவதால் தொற்றுப் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பருவமழையால் உயிரிழப்பு இல்லாமல் பேரிடரை எதிா்கொள்வது தமிழக அரசின் கடமையாகும்.

ஏற்கெனவே தலைமைச் செயலாளா், மாவட்ட ஆட்சியா்கள் நிலையிலான தொடா் ஆய்வை மேற்கொண்டு, அனைத்து மாவட்டங்களும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.