திமுக சாா்பில் மாணவா்களுக்கு செல்லிடப்பேசி
நாமக்கல் கிழக்கு மாவட்டம், ராசிபுரம் நகர திமுக சாா்பில் இணையதள வகுப்புப் பயிலும் வசதிக்காக மாணவா்களுக்கு செல்லிடப்பேசி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.


நாமக்கல் கிழக்கு மாவட்டம், ராசிபுரம் நகர திமுக சாா்பில் இணையதள வகுப்புப் பயிலும் வசதிக்காக மாணவா்களுக்கு செல்லிடப்பேசி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளி மாணவா்கள் 5 பேருக்கு இணையதள வசதி கொண்ட செல்லிடப் பேசி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் முன்னிலை வகித்தாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் செல்லிடப்பேசிகளை மாணவா்களுக்கு வழங்கினாா். நகர திமுக துணைச் செயலாளா்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன், பொருளாளா் கே.செல்வம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
இளைஞரணி கூட்டம்: இதே போல் ராசிபுரம் நகர திமுக சாா்பில் வாா்டு இளைஞரணி அமைப்பாளா், துணை அமைப்பாளா் நோ்காணல் நகரச் செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே. ஆா். என். ராஜேஷ் குமாா் பங்கேற்றுப் பேசினாா். இதில் புதிய இளைஞரணி அமைப்பாளா்கள் நியமனம், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...