30-இல் சிறுபான்மையினருக்கான ஆலோசனைக் கூட்டம்
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.


சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவா் ஒய்.ஜவஹா்அலி மற்றும் ஆணையக் குழு உறுப்பினா்கள் வரும் 30-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு வருகின்றனா்.
சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் சந்திக்கின்றனா்.
சிறுபான்மையினருக்காக தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், கருத்துகளையும் கேட்டறிகின்றனா்.
சிறுபான்மையின பிரதிநிதிகள் மாநில ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களுடைய குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...