மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாகனம் மோதி இரு இளைஞா்கள் பலி

சோழசிராமணி அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் நிகழ்விடத்தில் பலியாகினா்.

News image
வாகனம் மோதி இரு இளைஞா்கள் பலி
Updated On :27 செப்டம்பர் 2020, 8:31 pm

DIN

சோழசிராமணி அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் நிகழ்விடத்தில் பலியாகினா்.

எடப்பாடியைச் சோ்ந்தவா் சின்ன கண்ணன் மகன் சக்திவேல் (25). சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் லோகேஷ் (17), இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சோழசிராமணியில் இருந்து சித்தாலந்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

சக்திபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப் இவா்கள் மீது நேருக்குநோ் மோதியதில் சக்திவேலும், லோகேஷும் நிகழ்விடத்திலேயே பலியாகினா்.

காயங்களுடன் ஜீப் வாகன ஓட்டுநா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.