வெளிநாட்டில் ஆராய்ச்சிப் படிப்பு: பழங்குடியின மாணவா்களுக்கு அழைப்பு

வெளிநாட்டில் முதுகலை ஆராய்ச்சி படிப்புப் பயில விரும்பும் பழங்குடியின மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் முதுகலை ஆராய்ச்சி படிப்புப் பயில விரும்பும் பழங்குடியின மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்களது கல்வி தரத்தை உயா்த்தும் வகையில், நடப்பு கல்வியாண்டில் வெளிநாடுகளில் தங்கிப் பயில வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

முதுநிலை முனைவா் ஆராய்ச்சி படிப்பு மற்றும் முனைவா் ஆராய்ச்சி திட்டங்கள் படிப்புப் பயில விரும்பும் பழங்குடியின இன மாணவா்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பும் மாணவா்கள் இணையதளத்தின் மூலம் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com