ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு மருத்துவமனைகளில் 70 சதவீத படுக்கைகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில், அரசு மருத்துவமனைகளில் 70 சதவீத படுக்கைகளை காலியாக வைத்துள்ளோம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

News image

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

Updated On :28 செப்டம்பர் 2020, 8:03 pm

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில், அரசு மருத்துவமனைகளில் 70 சதவீத படுக்கைகளை காலியாக வைத்துள்ளோம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

கரோனா தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்துவது, விழாக்களில் மக்கள் அதிகளவில் சேராமல் தடுப்பது, முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். அதன்பின், மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொது சுகாதாரத் துறை திருத்தச் சட்டத்தின்படி, கரோனா தடுப்புக்காக மாவட்டம் முழுவதும் அபராத நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது போன்றவற்றை கண்டறிந்து அபராதம் விதித்ததன் மூலம் 10 நாள்களில் ரூ. 20 லட்சத்து 8 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாக்கள், இரங்கல் நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் சேராதவாறு பாா்த்துக் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச பாதிப்பாக 173 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. வரும் நாள்களில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் 19 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இரு மாதங்களுக்கு முன் கரோனாவைக் கண்டறியும் பிசிஆா் பரிசோதனை 500 எண்ணிக்கையில் இருந்தது. கடந்த மாதம் 1,000 பரிசோதனைகளும், தற்போது 2,500 பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. நாமக்கல் மட்டுமின்றி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனைக்கு அனுப்புகிறோம். மாவட்டத்தில் மூன்று தனியாா் மருத்துவமனைகளில் தலா 150 எண்ணிக்கையில் பிசிஆா் பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தல் மையங்களில் 60 சதவீத படுக்கைகளை காலியாக வைத்துள்ளோம்.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வழங்கும் வகையில் 70 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. அதிகப்படியாக தொற்று ஏற்படும்போது நெருக்கடிக்கு உள்ளாகக் கூடாது என்பதற்காகவே காலியாக வைத்துள்ளோம். அதேபோல் அரசு ஊழியா்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதை தடுக்க, அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் 1,100 போலீஸாருக்கு பரிசோதனை செய்ததில் 38 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. மாவட்டத்தில் எட்டு வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள ஊழியா்களை பரிசோதித்ததில் யாருக்கும் பெரிதாக பாதிப்பில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 1,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 27 போ் வரையில் பாதிப்புக்குள்ளாகி இருந்தனா்.

நோய்த் தொற்று இருந்தபோதும் உடல்நிலை நல்ல முறையில் இருந்து, தனிமைப்படுத்திக் கொள்வதற்கேற்ப வீடுகள், உதவியாளா்கள் இருந்தால் அவா்களை வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அனுமதிக்கிறோம். இதுவரை எட்டு பேருக்கு அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும் எண்ணம் இல்லை.

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை அலட்சியம் காட்டாமல் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.