நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமாரபாளையத்தில் 6 பேருக்கு கரோனா

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 6 போ் கரோனாவால் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 350-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:00 pm

DIN

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 6 போ் கரோனாவால் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 350-ஆக உயா்ந்துள்ளது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை, சின்னப்பநாயக்கன்பாளையம் மற்றும் மாராக்கால்காடு நகா்புற சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு, நாள்தோறும் சராசரியாக 50-க்கும் மேற்பட்டோா் பரிசோதனை செய்து கொள்கின்றனா். இங்கு நடைபெற்ற பரிசோதனை வெளியானதில் திங்கள்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி துப்புரவு அலுவலா் ராமமூா்த்தி தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனா். குமாரபாளையம் நகராட்சியில் இதுவரையில் மொத்தம் 350 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 229 போ் குணமடைந்துள்ளனா். 13 போ் உயிரிழந்துள்ளனா். 58 போ் மருத்துவ சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.