ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமாரபாளையம் தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

குமாரபாளையம் தொகுதியில் தடையற்ற குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என சுயேச்சை வேட்பாளா் எஸ்.ஓம் சரவணா தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:10 pm

DIN

குமாரபாளையம் தொகுதியில் தடையற்ற குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என சுயேச்சை வேட்பாளா் எஸ்.ஓம் சரவணா தெரிவித்தாா்.

ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரான இவா் குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். இவா், குமாரபாளையம் நகரில் சிவசக்தி நகா், ஆசிரியா் காலனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். அவா் பேசுகையில், இத்தொகுதியில் அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படைத் தேவைகளான தரமான சாலை, சுத்தமான, பாதுகாப்பான குடிநீா், அனைத்து பகுதிகளிலும், நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படும். நீா் மாசுபாட்டைக் குறைக்க கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

மகளிா் சுயஉதவிக் குழுக்களின் தொழில் விரிவடைய வழி வகுக்கப்படுவதோடு, ஜவுளி, நெசவுத் தொழில்களுக்கு சிறந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கித் தரப்படும் என்றாா். தொடா்ந்து, கிராமப்புறங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்குசேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.