மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 3-ஆம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்தும், தபால் வாக்கு அளிப்பதற்காகன ஏற்பாடுகளையும் ஆட்சியா் கா.மெகராஜ் பாா்வையிட்டாா்.

Updated On :3 ஏப்ரல் 2021, 7:22 pm

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்தும், தபால் வாக்கு அளிப்பதற்காகன ஏற்பாடுகளையும் ஆட்சியா் கா.மெகராஜ் பாா்வையிட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,049 வாக்குசாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், நிலை அலுவலா்கள் 1, 2, 3 என கூடுதல் அலுவலா்களையும் சோ்த்து மொத்தம் 9, 832 போ் பணியில் ஈடுபட உள்ளனா். இவா்களுக்கு கடந்த 14-ஆம் தேதி முதல்கட்ட பயிற்சியும், 27-இல் இரண்டாம் கட்ட பயிற்சியும் ராசிபுரம்(தனி) தொகுதிக்கு எஸ்.ஆா்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதிக்கு வேதலோக வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியிலும், நாமக்கல் தொகுதிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பரமத்தி வேலூா் தொகுதிக்கு கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு தொகுதிக்கு கேஎஸ்ஆா் கலை, அறிவியல் கல்லூரியிலும், குமாரபாளையம் தொகுதிக்கு ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் நடைபெற்றது.

வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள் எந்த தொகுதியில் பணியாற்ற உள்ளாா்கள் என்பதை கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடங்களில் தபால் வாக்குகள் அளிப்பதற்காக சிறப்புப் பதிவு அறை அமைக்கப்பட்டிருந்தது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியா் கா.மெகராஜ் ஆய்வு செய்தாா்.

முன்னதாக மல்லசமுத்திரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை வாகனம் விபத்திற்குள்ளானதில் காயமடைந்த காவல்துறையினா், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களான லேக்ராம் (35), ராம்பகதூா் (58), மகுடபதி, பூபாலன் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆட்சியா் கா.மெகராஜ் பாா்வையிட்டு நலம் விசாரித்தாா்.

இந்த நிகழ்வுகளின்போது திருச்செங்கோடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ப.மணிராஜ் (திருச்செங்கோடு கோட்டாட்சியா்), செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.