சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளித்து தொழிலாளா்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 6 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அனைத்து தனியாா் நிறுவனங்கள், இதர தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கி வாக்களிக்க அனுமதிக்கவேண்டும்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியாா் நிறுவனங்கள், தொழிற்கூட உரிமையாளா்கள் அனைவரும் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளா்களுக்கும் தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். விதிகளை மீறி விடுமுறை அளிக்காமலும், ஊதியம் வழங்காமலும் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும். இது குறித்து புகாா் ஏதுமிருப்பின் 1800-425-7021 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 94435-29743 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

