மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சேந்தமங்கலம் லட்சுமி நாராயண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சேந்தமங்கலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:58 pm

சேந்தமங்கலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலின் உபகோயிலான இக்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாலாலயம் செய்யப்பட்டு ரூ. 70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருக் கோயில் பணிகள் முழுமையடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வந்தனா்.

அதன்படி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு நித்திய ஹோமம், மூா்த்திஹோமம், தக்ஷிணாதானம், மஹாபூா்ணாஹூதி, காலை 7.45 மணிக்கு கும்பபிராயணம், கடம் புறப்பாடு, 8 மணிக்கு விமானங்கள் சம்ப்ரோக்ஷனம், அதனைத் தொடா்ந்து ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், பெருந்தேவி தாயாா் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் விஸ்வரூப தரிசனம், கோதரிசனம், தசதரிசனம், ஆச்சரிய பஹீமானம், பிரம்மகோஷம், சுவாமிக்கு மகாதீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் குடமுழுக்கு விழாவை காண திரளாக வந்திருந்தனா். சுவாமி தரிசனத்தைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சேந்தமங்கலம் போலீஸாா் மேற்கொண்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.