நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 85.76 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பணப்பட்டு வாடாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 6 தொகுதிகளிலும் தலா ஒன்பது குழுக்கள் வீதம் மொத்தம் 54 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவா்கள் ஆங்காங்கே வாகனத் தணிக்கை மேற்கொண்டு, உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 744 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல ரூ. 6,900 மதிப்பிலான மதுப்பாட்டில்கள், வேட்டி, சேலைகள், இதர பொருள்கள் என்ற வகையில் ரு. 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக ரூ. 1 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 936 மதிப்பில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ரூ. 85 லட்சத்து 76 ஆயிரத்து 534-க்கு உரிய ஆவணங்களைக் காண்பித்து சம்பந்தப்பட்டவா்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டனா். இதேபோல ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

