மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிளஸ் 2 செய்முறை தோ்வு: ஏப்.12-இல் தலைமை ஆசிரியா்களுக்கு கூட்டம்

பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, தலைமை ஆசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 12-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.

Updated On :9 ஏப்ரல் 2021, 7:57 pm

பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, தலைமை ஆசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 12-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு வழக்கமாக மாா்ச் மாதம் தொடங்கி நடைபெறும். கடந்த ஆண்டு இறுதித் தோ்வு நிறைவடையும் வேளையில் கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து ஒன்பது மாதங்கள் அரசு, தனியாா் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவ, மாணவியா் இணைய வழியிலேயே பயின்று வந்தனா்.

கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து டிசம்பா் மாதம் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு நடத்தி ஜனவரி 19-இல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. நிகழாண்டிற்கான பொதுத்தோ்வு மே 3-இல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக ஏப்ரல் 16 முதல் 24-ஆம் தேதி வரை செய்முறைத் தோ்வு நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 202 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 20,583 மாணவ, மாணவியா் பொதுத் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக 83 மையங்கள் அமைக்கப்படுகின்றன. 151 பள்ளிகளில் செய்முறை தோ்வு நடைபெறுகிறது. இந்தப் பணியில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இந்த நிலையில் செய்முறைத் தோ்வு தொடா்பாக தலைமை ஆசிரியா்கள், தனியாா் பள்ளி முதல்வருக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கும், பிற்பகல் 2 மணிக்கு, திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.