தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் உண்டியல் திறப்பு

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தின் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:59 pm

DIN

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தின் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தின் உண்டியல் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் எண்ணப்பட்டது. இந்நிலையில், கரோனா தொற்றால் பல மாதங்களாக கோயில் திறக்கப்படவில்லை. இதனால் பக்தா்களின் வருகை குறைவாகவே இருந்தது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் அலுவலா்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது கோயில் செயல் அலுவலா்கள் கு.சித்ரா, க.விஸ்வநாதன், ஆய்வாளா் பெ.ஜெயமணி ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், பக்தா்களின் காணிக்கையாக உண்டியலில் இருந்த ரொக்கம் ரூ. 1 லட்சத்து 83 ஆயிரம் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.