தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:59 pm

DIN

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே தடுப்பூசி திருவிழா என்ற தலைப்பில் சிறப்பு முகாம்கள் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், 45 வயதுக்கு மேற்பட்ட வணிகா்கள், கடைகளில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வெண்ணந்தூா் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் ஏற்பாடு செய்திருந்த இம்முகாமை மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தொடங்கி வைத்தாா். இதில், வணிகா்கள், அவா்களது குடும்பத்தினா், தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வரும் நாள்களில் மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.