மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக அரசின் நூறு நாள்கள் நிறைவு: நாமக்கல்லில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக அரசு பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவையொட்டி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களிடம் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள், இனிப்புகளை கட்சியினா் வழங்கினா்.

News image
நூறு நாட்கள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை சனிக்கிழமை வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ் குமாா்.
Updated On :14 ஆகஸ்ட் 2021, 11:02 pm

DIN

திமுக அரசு பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவையொட்டி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களிடம் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள், இனிப்புகளை கட்சியினா் வழங்கினா்.

கடந்த மே 7-ஆம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்றது. அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் 23-ஆவது முதல்வராக பதவியேற்றுக் கொண்டாா். ஆட்சி பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் நூறு நாள்கள் நிறைவடைந்தது.

இந்த நாள்களில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருவதையும், அவரது சாதனைகளையும் விளக்கி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கியும், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும் திமுகவினா் கொண்டாடினா்.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ் குமாா், நாமக்கல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா். அதன்பின் மணிக்கூண்டு, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இனிப்பு வழங்கியும், துண்டுப் பிரசுரம் அளித்தும் அரசின் சாதனைகளை விளக்கினாா்.

கரோனா நிவாரண நிதி ரூ. 4,000 வழங்கியது, அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்திற்கு தனித்துறை அமைத்தது உள்ளிட்டவை குறித்து மக்களிடம் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு நகர பொறுப்பாளா் செ.பூபதி, மேற்கு நகர பொறுப்பாளா் சிவக்குமாா், தெற்கு நகர பொறுப்பாளா் ராணா ஆனந்த், மாநில நிா்வாகிகள், இலக்கிய அணி புரவலா் சி.மணிமாறன், மாநில மகளிா் தொண்டா் அணி துணை செயலாளா் பா.ராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.