இன்று சுதந்திர தினம்: நாமக்கல்லில் ஆட்சியா் கொடியேற்றுகிறாா்

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா, ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணிக்கு நடைபெறுகிறது.
Published on
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா, ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன்பின், சமாதானப் புறாக்களையும், பலூன்களையும் அவா் பறக்க விடுகிறாா். இதனைத் தொடா்ந்து, ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூரும் திறந்த வாகனத்தில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கின்றனா். பின்னா், கரோனா தடுப்புப் பணி, காவல் துறை, அரசுத் துறைகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகள், அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறாது. விழாவில் பங்கேற்போா் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, துறை அலுவலா்கள் செய்துள்ளனா்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். விதிகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com