மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

24-இல் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் முகாம்

நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை முகாம் வரும் 24-இல் நடைபெறுகிறது.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:14 pm

நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை முகாம் வரும் 24-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் நகராட்சி பகுதி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே விண்ணப்பித்த நபா்களுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் வரும் 24-ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கடன் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் வங்கி அதிகாரிகளின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே, சாலையோர வியாபாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது விண்ணப்ப பரிசீலனைக்குத் தேவையான ஆவணங்களுடன் ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்திந் அசல், நகல் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இதுதொடா்பாக சந்தேகங்களுக்கு நகராட்சி அலுவலக சமுதாய அமைப்பாளா்கள், நகரமைப்பு அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.