மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

தூய்மைப் பணியாளா்களுக்கு மறுவாழ்வு அளிப்பு கருத்தரங்கு

நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சிறப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:50 pm

நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சிறப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் வரவேற்றாா். நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், நிா்வாகப் பொறியாளா் சுகுமாா், தொண்டு நிறுவன அலுவலா் மனோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளா் சரவணகுமாா் பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதரே அள்ளும் நிலைமை மாற வேண்டும். அத்தொழிலுக்கு அரசு தடை விதித்தபோதும், அதில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளா்கள், இதர பணியாளா்களின் குழந்தைகளும், அந்தத் தொழிலைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அவா்களின் நலனுக்காக தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை அவா்கள் தாட்கோ உதவியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.